close
Choose your channels

விஜய் சேதுபதியை பார்க்க ரிஸ்க் எடுத்த கிராம மக்கள்: படக்குழுவினர் அதிர்ச்சி

Monday, November 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஜனநாதன் இயக்கி வரும் ’லாபம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்ட தகவல் கிடைத்த அந்த பகுதி கிராம மக்கள் விஜய் சேதுபதி பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு குவிந்தனர். கடந்த பத்து நாட்களாக இந்த கிராமத்தில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் விஜய் சேதுபதியை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது

படப்பிடிப்பு தளத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு ஏற்கனவே நிபந்தனை விதித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்ததால் படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மேலும் படப்பிடிப்பை பார்க்க வந்த ரசிகர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல், முகக் கவசம் அணியாமல் இருந்தது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விஜய் சேதுபதி சுருதிஹாசனை பார்க்க குவிந்து வரும் நிலையில் தற்போது காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளின்படி லாபம்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.