close
Choose your channels

ரஜினிக்கு பத்ம பூஷன் விருது ஏன் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் விளக்கம்

Thursday, January 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த உயர்ந்த விருதை பெற்ற ரஜினிகாந்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த நிலையில் தற்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த விருது ரஜினிக்கு கிடைத்தது குறித்து கருத்து கூறியுள்ளார்.

இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியபோது, 'ரஜினி சிறந்த நடிகர் என்பது மட்டுமின்றி சிறந்த மனிதர் என்பதாலேயே அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அவர் தலைமுறைகளைக் கவர்ந்த நடிகர்.

நடிகர் ரஜினிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டதால், அந்த விருதுக்கு பெருமை கிடைத்துள்ளதாகவும் இந்த விருது விருது அவருக்கு வழங்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.