close
Choose your channels

யாருமே இப்ப வாயை திறப்பதில்லை: பிரபல நட்சத்திரங்களை போட்டு தாக்கும் பிரகாஷ்ராஜ்!

Wednesday, July 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அரசுக்கு எதிராக குரல் கொடுத்த நட்சத்திரங்கள் தற்போது அமைதியாக இருக்கின்றனர் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பிரகாஷ்ராஜ் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட அவர் ராமர் அனுமார் மற்றும் இந்திய தேசிய சின்னம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்து அப்போதும் இப்போதும் எப்படி இருக்கிறது என கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் மத்திய அரசுக்கு எதிராக தங்களது ட்விட்டர் பக்கங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது அனைவருமே அமைதியாக இருக்கின்றனர் என்று அவர் பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி கடந்த 2012ஆம் ஆண்டு பெட்ரோல் விலை ஏற்றத்தை கிண்டல் செய்த டுவிட்டையும், பிரபல நடிகர் அனுபம் கேர் இந்திய ரூபாய் மதிப்பு சரிவை விலாசியதையும், நடிகை ஷில்பா செட்டி இந்திய ரூபாயை வென்டிலேட்டர் இழுத்துக் கொண்டிருக்கிறது என்று கலாய்த்த டிவிட்டையும் பதிவு செய்து கலாய்த்துள்ளார். அதேபோல் அமிதாப்பச்சன், ஜூஹி சாவ்லா உள்ளிட்ட பிரபலங்கள் விலைவாசி உயர்வு குறித்து பதிவு செய்த டுவிட்டை பதிவு செய்து இவர்கள் எல்லாம் தற்போது ஏன் வாயை திறப்பதில்லை என்பதை மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.