close
Choose your channels

தமிழத்தில் மீண்டும் ரிலீஸாகும் 'புஷ்பா': காரணம் இதுதான்!

Friday, January 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இன்று முதல் மீண்டும் 50 திரையரங்குகளில் தமிழகத்தில் ‘புஷ்பா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த பொங்கல் தினத்தில் 8க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆன போதிலும் இந்த படங்களின் வசூல் திருப்திகரமாக இல்லை என்றும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற நிலையில் 10 முதல் 20% பார்வையாளர்களை திரையரங்குகளில் வந்து கொண்டு இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணத்தினால் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘புஷ்பா’ திரைப்படம் மீண்டும் 50 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளதாகவும் இந்த படத்திற்கு இன்றைய காட்சிகளில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் ஓடிடியிலும் ரிலீஸான போதிலும் திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாகி உள்ளது என்பதும் ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.