close
Choose your channels

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது: ரஜினி, அஜித், சூர்யா வாக்களித்தனர்!

Tuesday, April 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் திரையுலக பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வரிசையில் நின்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் வாக்களித்த ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்காளர்கள் அதிகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் மனைவி ஷாலினியுடன் தல அஜித் வாக்களித்தார். அஜித் வாக்களிக்க வந்த திருவான்மியூர் வாக்குச்சாவடியில் மிக அதிகமாக வாக்காளர்கள் காத்திருந்தனர் என்பதும் அவர்களில் சிலர் அஜித்துடன் செல்ஃபி எடுக்க முயன்றதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் சூர்யா, கார்த்தி மற்றும் சிவக்குமார் ஆகிய மூவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற சற்றுமுன் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.