close
Choose your channels

'காலா'வுக்கு பிறகு என்ன என்பதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

Saturday, December 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்த நிலையில் இன்று சென்னை ரசிகர்களை சந்தித்து வருகிறார். வழக்கம்போல் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் முன் இன்று அவர் சென்னை ரசிகர்கள் முன் பேசியதாவது:

நான் மெட்ராஸ்காரன் தான். 1973ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து வருகிறேன். அந்த காலக்கட்டத்தில் மதராஸ் என்றால் கர்நாடகத்தில் உயர்வாக பேசப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றபோது என்னை என்னுடைய ரசிகர்களின் பிரார்த்தனை காப்பாற்றியது. நடிப்பு, அரசியலெல்லாம் வேண்டாம் நீங்கள் உயிருடன் வந்தால் போதும் என்ற ரசிகர் ஒருவரின் கடிதம் என்னை கண்கலங்க வைத்தது.

2.O பெரிய அளவில் பேசப்படும். அதேபோல் 'காலா' படத்தில் வேறொரு ரஜினியை பார்க்க முடியும்.  காலாவுக்கு பிறகு என்ன என்பதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும். ஏப்ரல் 14-ம் தேதி 2.O வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்த இரண்டு மாதங்களில் காலா வெளியிடப்படும்

வாழ்க்கையில் குறுக்கு வழியில் செயல்பட நினைத்தால் எதுவும் நிலைக்காது. நாம் கண்ட கனவு நனவாகவில்லை என்றால் அதற்காக வருந்தக் கூடாது. இயக்குநர் பாலச்சந்தர் எனக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது மட்டுமின்றி என்னை ஒரு மகனாகவும் தத்தெடுத்து வளர்த்தார்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.