close
Choose your channels

'அண்ணாத்த' படத்தின் எஸ்பிபி பாடல் ரிலீஸ்: ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு!

Monday, October 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலை மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடல் இதுதான் என்பது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தில் இடம்பெற்ற எஸ்பிபி யின் கடைசி பாடல் வெளியாகியுள்ளதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.