close
Choose your channels

எவிக்சனுக்கு பிறகு ரக்சிதாவின் முதல் பதிவு.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Monday, January 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் கடந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் ரக்சிதா வெளியேறுவார் என்று யாருமே எதிர்பாராத நிலையில் திடீரென அவர் வெளியேற்றப்பட்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இருப்பினும் அவர் இந்த நிகழ்ச்சியில் 91 நாட்கள் தாக்குப் பிடித்து இருந்தது என்பது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. இன்னும் ஒரே ஒரு வாரம் அவர் இருந்திருந்தால் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொண்டிருப்பார் என்று ரசிகர்கள் வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உடன் ரக்சிதா தனது சமூக வலைதளத்தில் செய்த முதல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ‘இந்த பயணத்தில் நீங்கள் அனைவரும் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என பதிவு செய்துள்ள ரக்சிதா, நீங்கள் இல்லாமல் என்னால் இந்த சாதனையை செய்திருக்க முடியாது, உங்கள் அனைவரின் எல்லையில்லா அன்பிற்கு நன்றி, உங்களால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன்’ என்றும் பதிவு செய்துள்ளார்.

பிரிவோம் சந்திப்போம்’ ’சரவணன் மீனாட்சி’ உள்பட பல சீரியல்களில் நடித்த ரக்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மேலும் பல சீரியல்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.