close
Choose your channels

மியா மால்கோவாவுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்தேன்: ராம்கோபால் வர்மா

Thursday, May 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ’கிளைமாக்ஸ்’ படப்பிடிப்பின்போது மியா மால்கோவாவுடன் தான் சமூக இடைவெளியை கடைபிடித்ததாக இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க நடிகை மியா மால்கோவா நடிப்பில் உருவாகியுள்ள ’கிளைமாக்ஸ்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஆன்-லைனில் வெளியாக உள்ளது. என்னுடைய ’கிளைமாக்ஸ்’ படத்தின் ரிலீசை கொரோனா வைரஸால் கூட தடுக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மியா மால்கோவாவின் அரை நிர்வாண, நிர்வாண காட்சிகள் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ராம்கோபால் வர்மா ’கிளைமாக்ஸ்’ படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்கி விட்டார். அதன் முதல் கட்டமாக மியா மால்கோவா மற்றும் ராம் கோபால்வர்மா ஆகியோர் பாலைவனப் பகுதி ஒன்றில் நாற்காலியில் உட்கார்ந்து காட்சிகளை டிஸ்கஸ் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் குறித்து அவர் ’கிளைமாக்ஸ்’ படத்தின் காட்சியை படமாக்கியபோது, மியாவுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்தேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட்டுக்கு ராம்கோபால் வர்மா பாணியிலேயே பலர் கமெண்ட்டுகள் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.