close
Choose your channels

ஓவியா-பிந்துமாதவி குறித்து பரவும் பரபரப்பு வதந்தி

Friday, August 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் அமைதியாக நுழைந்து இன்று ஆர்ப்பாட்டமாக காணப்படுவது ஓவியா மட்டுமே. ஓவியாவை அந்த வீட்டில் உள்ள 8 பேர் வேண்டுமானால் வெறுக்கலாம். ஆனால் அவருக்கு கோடிக்கணக்கானோர் ஆதரவு வெளியே உள்ளது. ஓவியாவை வெளியேற்றிவிட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன ஆகும் என்பதை அந்த சம்பந்தப்பட்ட சேனலே இப்போது புரிந்து கொண்டிருக்கும்.

இந்த நிலையில் ஓவியாவின் புகழை கட்டுப்படுத்தவே கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படும் பிந்துமாதவியை இப்போதும் பார்வையாளர்கள் ஒரு பங்கேற்பாளராக பார்க்காமல், ஒரு கெஸ்ட் ஆகவே பார்த்து வருகின்றனர். அவரும் மற்றவர்களிடம் பெரிதும் ஒட்டாமல் உள்ளார். அவ்வப்போது ஒருசில அறிவுபூர்வமான கேள்விகளை கேட்பதை தவிர...

இந்த நிலையில் பிந்துமாதவிக்கு வாரம் ரூ.3 லட்சம் சம்பளம் தரப்படுவதாகவும், ஓவியாவுக்கு வாரம் ரூ.2.5 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. மேலும் ஓவியாவை விட அதிக சம்பளம் பெறும் பிந்துமாதவியிடம் இருந்து ஓவியாவை விட அதிக பெர்மான்ஸை அந்த சேனல் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இன்றைய நிலைமைக்கு எவ்வளவு பெரிய நடிகை உள்ளே வந்தாலும் பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியாவை அசைக்க முடியாது என்பதே உண்மை என்று ஓவியா ஆர்மியினர் அடித்து கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.