close
Choose your channels

ரூ.1.84 கோடி காரை பரிசாக பெற்ற விஜய் பட வில்லன்: பரிசு கொடுத்தது யார் தெரியுமா?

Wednesday, January 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த திரைப்படத்தின் இயக்குனர் அல்லது ஹீரோவுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் கார் பரிசாக அளிப்பது கோலிவுட்டில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் நாயகன், தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருக்கு ரூபாய் 1.8 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த காரை பரிசாக கொடுத்தது நடிகர் சல்மான்கான் என்பதும் பரிசாகப் பெற்றவர் நடிகர் கிச்சா சுதீப் என்பதும் இவர்கள் இருவரும் ’தபாங் 3’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், கிச்சா சுதீப் நடித்த ’தபாங் 3’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பாக நடித்த கிச்சா சுதீப்புக்கு தகுந்த பரிசு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்த நடிகர் சல்மான் கான், கிச்சா சுதீப்புக்கு ரூபாய் 1.84 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசளித்ததோடு அவருடைய வீட்டிற்கே சென்று அந்த காரை வழங்கி உள்ளார்.

சல்மான் கானையும் அவர் கொண்டுவந்த காரையும் பார்த்து ஆச்சரியம் அடைந்த கிச்சா சுதீப், அவருக்கு நன்றி தெரிவித்ததோடு இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சல்மான்கான் தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருக்கு ரூபாய் 1.84 கோடி மதிப்புள்ள காரை பரிசாக அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கிச்சாசுதீப், விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.