close
Choose your channels

'தி ஃபேமிலிமேன் 2' விவகாரம்: மன்னிப்பு கேட்டார் சமந்தா

Thursday, August 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தா நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்தப் வெப்தொடர் மிகப் பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது என்பதும் சமந்தாவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை சமந்தா இதுகுறித்து கூறிய போது ’’தி ஃபேமிலிமேன் 2’ வெளியாகும் முன்பு வந்த கண்டனம் அந்த தொடர் வெளியான பிறகு நின்று விட்டது போல் தான் எனக்கு தெரிகிறது. இருப்பினும் நான் அந்த கேரக்டரில் நடித்ததை வெறுப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காக நான் உண்மையாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை. நான் அந்த தொடரில் உள்ள ராஜி என்ற கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். எனது பங்கு அது மட்டும் தான். இருப்பினும் அந்த கேரக்டரால் யாராவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.