close
Choose your channels

முழுமையாக குணமாகும் முன்பே களத்தில் இறங்கிய சமந்தா.. வைரல் புகைப்படம்!

Thursday, January 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் முழுமையாக குணமாகும் முன்பே அவர் மீண்டும் திரையுலகில் களத்தில் இறக்கி விட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சமந்தா நடித்த ’யசோதா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் நடித்து முடித்திருக்கும் ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’சாகுந்தலம்’ படத்தில் தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்கி உள்ளதாக சமந்தா, இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

எனக்கு உண்மையான சிகிச்சை என்பது கலையில் ஈடுபடுவதுதான் என்றும் கலையில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நான் விரைவில் மீண்டு வருவேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சமந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.