close
Choose your channels

தோளுக்கு மேல் வளர்ந்த தோழனுடன் சமுத்திரக்கனி.. எப்போது ஹீரோ ஆவார்?

Monday, January 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரகனி தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் தோளுக்கு மேல் வளர்ந்த மகனுக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் பதிவு செய்த கமெண்ட்ஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ’சுப்பிரமணியபுரம்’ என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி அதன்பிறகு பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்றும் ஒருசில திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘நாடோடிகள்’ என்ற வெற்றிப்படத்தை அடுத்து ’போராளி’ ’நிமிர்ந்து நில்’ ’அப்பா’ உள்பட பல திரைப்படங்களை இயக்கிய சமுத்திரக்கனி தற்போதும் பிசியான நடிகராக உள்ளார். குறிப்பாக அஜித் நடித்த ’துணிவு’, தனுஷ் நடித்த ’வாத்தி’ உள்பட ஒரு சில படங்களில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சமுத்திரக்கனி பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் சமுத்திரக்கனியை விட அவரது மகன் வளர்ந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஒரு ஹீரோவுக்கான தகுதி அனைத்தும் சமுத்திரக்கனி மகனுக்கு வந்துவிட்டது என்றும் விரைவில் அவரே தனது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்யலாம் என்றும் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.