close
Choose your channels

திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவு: ராதிகாவின் நெகிழ்ச்சி பதிவு!

Thursday, February 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் பிரபல நடிகை ராதிகா ஆகிய இருவரும் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி இதே நாளில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ராகுல் சரத்குமார் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா திருமணம் நடந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து ராதிகா தனது இன்ஸ்டாகிராமில் நெகழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார். எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்தது விதியும் வினோதம் என்றும் இந்த அற்புதமான ஒற்றுமையான பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நீங்கள்தான் எனக்கு வலிமையை தருபவர் என்றும் உங்களை நான் நேசிக்கின்றேன் என்றும் ராதிகா பதிவு செய்துள்ளார்.

ராதிகாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது என்பதும், 20 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிகளுக்கு திரையுலகினர்களும் ஏராளமான ரசிகர்களும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos