close
Choose your channels

ஆன்மீக பாதையில் சரத்குமார் - ராதிகா தம்பதி.. சொந்த பந்தங்களுக்கு தெரிவித்த நன்றி..!

Friday, February 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான சரத்குமார் - ராதிகா தம்பதிகள் ஆன்மீக பாதையில் சென்றுள்ள நிலையில் அவர்கள் தங்கள் குலதெய்வ கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா. இந்த நிலையில் சரத்குமார் தனது குலதெய்வ கோயிலுக்கு மனைவி ராதிகாவுடன் சென்றதை தனது சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்

தற்போது அவர் குலதெய்வ கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதாக புகைப்படத்துடன் ஒரு பதிவை செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே என் தந்தை பிறந்த தளக்காவூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மற்றும் சிராவயல் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நிகழ்வில் குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று நேற்றும், இன்றும் கலந்து கொண்ட சொந்த பந்தங்களுக்கும், ஆலய பங்காளிகளுக்கும், கிராமத்து பெரியவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் அனைவருடன் மேற்கொண்ட மனநிறைவான குலதெய்வ வழிபாட்டின் பலனாக, ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் அருளாசி மக்கள் அனைவருக்கும் கிடைக்க இந்த இனிய தருணத்தில் பிரார்த்திக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.