close
Choose your channels

சின்னத்திரை இயக்குனரின் 'செயலி' ஆரம்பம்

Saturday, June 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் ராஜ்குமார். இவர் முதல் முறையாக "செயலி" என்கின்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

மிகுந்த பொருட்ச்செலவில் பிரமாண்டமாக தயாராகவுள்ள இந்த படத்திற்கு 'செயலி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாக விருக்கும் "செயலி" படத்தின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது.

தம்பி ராமையா, விடிவி கணேஷ், சிங்கம்புலி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்தர், ஸ்ரீமன், பிரேம், இனியா, தேவதர்ஷினி இவர்களுடன் 5 பள்ளி குழந்தைகள் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கவுள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவில், அண்டனி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் ஒரு குறுகியகால பிரமாண்ட தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.