close
Choose your channels

ஷில்பா ஷெட்டி விவகாரத்தா? இயக்குனர் பரப்பிய வதந்தியால் பரபரப்பு 

Tuesday, March 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக பிரபல இயக்குனர் அனுராக் பாசு அனுப்பிய மெசேஜ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, தொழிலதிபர் ராஜ்குந்த்ரேவை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இந்த நிலையில் ஷில்பாவும், அவரது கணவரும் டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டனர். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் அனுராக் பாசு, ஷில்பாவின் மொபைலை அவருக்கு தெரியாமல் எடுத்து, 'நான் ராஜ்குந்த்ரேவை விவாகரத்து செய்ய போகிறேன்' என்று மெசேஜை ஷில்பாவின் அம்மாவுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த மெசேஜை பார்த்து திடுக்கிட்ட ஷில்பாவின் அம்மா உடனே ஷில்பாவுக்கு போன் செய்து விபரம் கேட்க, அப்போதுதான் இது அனுராக் பாசு கிளப்பிய வதந்தி என தெரிய வந்தது.

இந்த வதந்தி ஒருசில நிமிடங்களில் பாலிவுட் முழுவதும் பரவி, பலர் போன் செய்து ஷில்பாவிடம் விளக்கம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.