close
Choose your channels

'இது புன்னகை அரசி ரம்யா பாண்டியனின் வேலை தான்': ஷிவானியின் இன்ஸ்டா போஸ்ட் வைரல்!

Wednesday, February 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சர்ச்சைக்குரிய வகையில் பாலாஜியுடன் மட்டுமே நெருக்கமாக இருந்தாலும் கடைசி நேரத்தில் சிங்கப்பெண்ணாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இன்ஸ்டாவில் தனது விதவிதமான அழகிய புகைப்படங்களை பதிவு செய்து தனது ஃபாலோயர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வருகிறார்.

அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸாவில் பதிவு செய்துள்ள புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஏனெனில் இந்த புகைப்படத்தை எடுத்தது ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவில் ஷிவானி நாராயணன் ’நேற்று இரவு இந்த புகைப்படத்தை புன்னகை அரசி ரம்யா பாண்டியன் எடுத்துள்ளார்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு ரம்யா பாண்டியன், ‘என்ன ஒரு புத்திசாலித்தனமான போட்டோகிராபர்’ என்று முதல் கமெண்ட்டாக தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார். அதிமுக கொடியின் கலரில் உடை அணிந்திருக்கும் ஷிவானியின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் விதவிதமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.