close
Choose your channels

கலாபவண் மணி கொலையா? அதிர்ச்சி தகவல்

Monday, March 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


தேசியவிருது பெற்ற பிரபல மலையாள நடிகர் கலாபவண் மணி திடீர் மரணம் அடைந்த செய்தியை நேற்றிரவு ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் கலாபவண் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன் என்பவர் சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.


இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் கலாபவன் மணி மரணம் அடைவதற்கு முன்னர் தனது வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அவர் அருந்திய மதுவில் மெத்தனால் கலந்திருந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மெத்தனால் கலந்த மதுதான் அவரது உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனவே கலாபவண் மணியின் உடல் முழு பிரேத பரிசோதனைக்காக இன்று திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டிருப்பதாகவும் இந்த பரிசோதனையின் முடிவு தெரிந்த பின்னரே அவரது மரணம் குறித்த உண்மைகள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.