close
Choose your channels

சூர்யாவுக்கு உதவும் பெண் சிஐடி அதிகாரி

Wednesday, December 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பசங்க 2', '24' படங்களை அடுத்து சூர்யா நடிக்கவுள்ள 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கவிருந்த நிலையில் சென்னையை போலவே கொல்கத்தாவில் மழை பெய்வதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் 'சிங்கம் 2' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தபோதிலும், அவரை ஒருதலையாக காதலிக்கும் பள்ளி மாணவி கேரக்டரில் ஹன்சிகா நடித்திருந்தார். ஆனால் சிங்கம் 3' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் சூர்யாவை காதலிக்கும் வேடத்தில் நடிக்கவில்லை என்றும், காவல்துறை அதிகாரியான சூர்யாவுக்கு உதவி செய்யும் பெண் சி.ஐ.டி அதிகாரியாக அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஸ்ருதிஹாசன் முதன்முதலாக இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பி கொல்கத்தாவிலும் பின்னர் சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.