close
Choose your channels

ஆரம்பமாகிறது சிம்புவின் 'பத்து தல' படப்ப்பிடிப்பு !

Wednesday, August 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ள ’மாநாடு’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் 20ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் மற்றும் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்கும் ரொமான்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அதன் பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

கிருஷ்ணா என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான பாடல் கம்போஸிங் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.