close
Choose your channels

என் வாழ்க்கையின் மிக அழகான கட்டம்: தாய்மை அடைந்த பிரபல பாடகியின் டுவீட்

Sunday, March 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் பாடல்கள் பாடிய பாடகி ஸ்ரேயா கோஷல் தற்போது கர்ப்பமாக இருப்பதை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி தனது நீண்டகால நண்பர் Shiladitya Mukhopadhyaya என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதை சமூகவலைதளங்களில் தெரிவித்த ஸ்ரேயா கோஷால், தற்போது அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

மேலும் அந்த பதிவில் ’என் வாழ்க்கையின் மிக அழகான கட்டத்தை அனுபவிக்கிறேன் என்றும், கடவுளின் தெய்வீக அதிசயம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

பாடகி ஸ்ரேயா கோஷல் தமிழில் ‘ஆல்பம்’ என்ற திரைப்படத்தில் கார்த்திக் ராஜாவின் இசையமைப்பில் முதன்முதலில் ஒரு பாடலை பாடினார். அதன்பிறகு 7ஜி ரெயின்போ காலனி, விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஐயா, அன்னியன், மும்பை எக்ஸ்பிரஸ், சண்டக்கோழி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் பாடினார். அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அவர் பாடிய ’வானே வானே’ என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டு பிள்ளை’, சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்பட பல படங்களில் அவர் பாடிய பாடல்களும் சமீபத்தில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி, நேபாளி, ஒரியா, போஜ்புரி, பஞ்சாபி, துளு உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பாடல்கள் பாடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.