close
Choose your channels

இசைஞானியை மிஸ் செய்த சிவகார்த்திகேயன்

Thursday, April 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள 'ஓயே' திரைப்படம் விரைவில் வெளியாக படக்குழுவினர் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஃபிரான்சிஸ் மார்க்கஸ் முதலில் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயனை அணுகினாராம். படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்திருந்தாலும், வேறொரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்ததால், அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதேபோல் இன்னொரு பெரிய ஹீரோவின் கால்ஷீட் தேதியும் கிடைக்கவில்லையாம்.

எனவேதான் இயக்குனர் ஃபிரான்சிஸ், புதுமுகம் கீதன் பிரிட்டோ மற்றும் ஈஷா ஆகியோர்களை நடிக்க வைத்ததாக கூறினார். மேலும் இந்த படத்தின் கதை தேவர் மகன்' படத்தை போலவே தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவை நெகிழ்ச்சியுடம் கூறுவது என்றும் இந்த படத்திற்காக ஹீரோ கீதன் சிலம்பாட்டம் பழகியதாகவும் கூறினார்.
இசைஞானியின் இசையில் முதன்முதலாக நடிக்கவிருக்கும் வாய்ப்பை சிவகார்த்திகேயன் இழந்தாலும் இனிவரும் காலங்களில் அவர் கண்டிப்பாக இசைஞானியின் இசையில் உருவாகும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.