close
Choose your channels

எல்லா நல்ல கதையும் என்கிட்டயே வருதே: பிரபல நடிகருடன் நடிப்பது குறித்து எஸ்.ஜே.சூர்யா!

Saturday, January 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனரும் நடிகருமாகிய எஸ்ஜே சூர்யா கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும், குறிப்பாக 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தளபதி விஜய்யின் ’மெர்சல்’ 2019ஆம் ஆண்டு வெளிவந்த ’மான்ஸ்டர்’ 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ’மாநாடு’ ஆகியவை எஸ்ஜே சூர்யாவின் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் இருந்தபோது படங்கள் என்பதும் இந்த படங்கள் அனைத்துமே நல்ல வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ உள்பட நான்கு முக்கிய படங்களில் எஸ்.ஜே சூர்யா நடித்து வரும் நிலையில் தற்போது விஷாலின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

விஷாலின் 33வது படத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதை படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் உறுதி செய்ததை அடுத்து எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஓ மை கடவுளே! எல்லாம் நல்ல கதையும் என்கிட்டயே அனுப்புறியே! டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் கதை கூறியதைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். என்ன ஒரு அருமையான கதை, நிச்சயம் வெற்றிப்படம்தான். இதை ’மாநாடு 2’ என்று கூட சொல்லலாம், அப்படி ஒரு திரைக்கதை’ என்று பதிவு செய்துள்ளார்.

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பதும் வினோத்குமார் தயாரிக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.