close
Choose your channels

டிக்டாக்கில் புகழ் பெற்ற 9 வயது சிறுமி மர்ம மரணம்!

Saturday, July 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவில் டிக்டாக் வீடியோவால் புகழ் பெற்ற ஆருணி என்ற 9 வயது சிறுமி மர்ம நோயால் மரணம் அடைந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்தினர்களையும் டிக்டாக் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

மலையாள பாடல்கள் பின்னணியில் ஆருணி தோன்றும் டிக்டாக் வீடியோவுக்கு கேரளாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென ஆருணிக்கு உடல்நலமின்றி போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் சில பிரச்சனை இருந்ததாகவும், அந்த பிரச்சனை என்னவென்று தெரியாமல் மருத்துவர்கள் குழப்பம் அடைந்ததாகவும் தெரிகிறது. தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் ஆருணி கடந்த 25ஆம் தேதி மரணம் அடைந்தார்.

கடந்த ஆண்டு தான் ஆருணியின் தந்தை சவுதி அரேபியாவில் ஒரு விபத்தில் காலமான நிலையில் தற்போது ஆருணியும் மரணம் அடைந்துவிட்டதால் அவரது குடும்பத்தினர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆருணியின் ஆத்மா சாந்தியடைய அவரது டிக்டாக் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.