ராம்சரண்-ஜூனியர் என்.டி.ஆரை இணைத்த ராஜமெளலி, ரஜினி-கமலை இணைப்பாரா? மாஸ் தகவல்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் ஒரே படத்தில் இணைத்த சாதனையை ராஜமௌலியை தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்பதும் இன்று வெளியாகியுள்ள ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராம் சரண் தேஜா , ஜூனியர் என்டிஆரை ஒரே படத்தில் இணைத்த இயக்குனர் ராஜமவுலி, தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான ரஜினி, கமலை இணைக்க ஆசையாக உள்ளதாக கூறியுள்ளது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினி, கமல் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்கள் என்பதும் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, கமல் இருவரையும் மீண்டும் ஒரு சில இயக்குனர்கள் இணைக்க முயற்சித்து வந்த போதிலும் அது நிகழாமல் இருக்கும் நிலையில் தற்போது ராஜமவுலி, ரஜினியை வில்லனாகவும் கமல்ஹாசனை ஹீரோவாகவும் அல்லது கமல்ஹாசனை வில்லனாகவும் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசையாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
ராஜமவுலியின் இந்த ஆசை நடக்குமா என்பது தெரியவில்லை என்றாலும் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆரை இணைத்த ராஜமௌலிக்கு ரஜினி கமலை இணைப்பதில் சிரமம் இருக்காது என்றே கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.