close
Choose your channels

சூர்யாவின் திடீர் மாற்றத்திற்கு நயன்தாரா காரணமா?

Tuesday, September 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினியின் 'கபாலி' இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக ரஞ்சித் அறிவித்தார். சிங்கம் 3' படத்தை அடுத்து சூர்யா, ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தியை இயக்குனர் முத்தையாவும் உறுதி செய்தார்.
இந்நிலையில் சூர்யாவின் 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு நயன்தாராவே காரணம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் சூர்யாவை சந்தித்த நயன்தாரா விக்னேஷ் சிவனின் கதையை கேட்டு அந்த கதை பிடித்தால் கால்ஷீட் தருமாறு கேட்டுக்கொண்டதாகவும் இதன்படி கதை கேட்ட சூர்யா, விக்னேஷ் சிவன் கூறிய கதை பிடித்துவிட்டதால் உடனே பச்சை கொடியை காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.