close
Choose your channels

சமுத்திரக்கனியின் 'அப்பா' குறித்து சூர்யா என்ன கூறப்போகிறார்?

Sunday, April 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யாவின் அப்பா சிவகுமாரின் ஓவியம் வரைதல் குறித்து நேற்று சூர்யா பெருமையாக கூறியதை பார்த்தோம். இந்நிலையில் சமுத்திரக்கனியின் அப்பா குறித்து நாளை சூர்யா பேசவுள்ளாராம். ஆனால் சூர்யா பேசவுள்ளது சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்தை குறித்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு பிரபுசாலமன் தயாரிப்பில் அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம் சாட்டை'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படும் 'அப்பா' என்ற படத்தை சமுத்திரக்கனி நடித்து, தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாளை அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி மாலை 6 மணிக்கு தனது சமூக வலைத்தளம் மூலம் இந்த படம் குறித்த தனது கருத்தை தெரிவிக்கவுள்ளார். இந்த படம் குறித்து சூர்யா என்ன சொல்ல போகிறார் என்பதை கேட்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.