close
Choose your channels

முதல்முறையாக பார்த்து ஆச்சரியம் அடைந்த சூர்யா: வைரல் புகைப்படம்!

Friday, April 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா முதல் முறையாக பார்த்து ஆச்சரியம் அடைந்த விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ’சூர்யா 41’ என்ற இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் சூர்யா கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை நேரில் காண சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்து, ‘முதல் முறையாக திருவள்ளுவர் சிலையை நேரில் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும்,  சூர்யாவின் தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூவும் ’சூர்யா 41’  படத்தில் நடித்து வருகின்றனர்.  பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.