close
Choose your channels

மனைவியாக இருக்க மாதம் ரூ.25 லட்சம் சம்பளம்: விஷால் பட நடிகையிடம் தொழிலதிபர் பேரம்!

Thursday, July 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொழிலதிபர் ஒருவர் தன்னுடன் மனைவியாக இருக்க மாதம் 25 லட்ச ரூபாய் பேரம் பேசியதாக விஷால், ஜெயம் ரவி படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஹிந்தி உள்பட ஒரு சில மொழிகளில் நடித்தவர் நடிகை நீதுசந்திரா. இவர் தமிழில் ’யாவரும் நலம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் விஷாலின் ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ ஜெயம் ரவி நடித்த ’ஆதி பகவன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார்.

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிலையில் தொழிலதிபர் ஒருவர் தனக்கு மனைவியாக இருந்தால் மாதம் ரூபாய் 25 லட்ச ரூபாய் சம்பளம் தருவதாக பேரம் பேசியதாகவும் இதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.

நான் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தும் தற்போது தனக்கு வாய்ப்பு இல்லை என்றும் தன்னை எந்த இயக்குனர்களும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் ஆதங்கத்துடன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இருப்பினும் தன்னிடம் பேரம் பேசிய அந்த தொழிலதிபர் யார் என்பதை கடைசிவரை நீது சந்திரா சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.