close
Choose your channels

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட சோதனை.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

Sunday, January 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நோய் அவரை தாக்கி உள்ளதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஷால் நடித்த ’சிவப்பதிகாரம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை மம்தா மோகன் தாஸ். அதன் பிறகு அவர் ’குசேலன்’ ’குரு என் ஆளு’ ’தடையறத் தாக்க’ ’எனிமி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மம்தா மோகன் தாஸ் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு தேறினார். இந்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென விட்டிலிகோ (Vitiligo) என்ற நோய் தன்னை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நோய் தோலின் நிறத்தை இழக்க செய்யும் வகையை கொண்டது என்றும், எனவே தான் கொஞ்சம் கொஞ்சமாக நிறத்தை இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளனர்.

மேலும் அவர் தன்னம்பிக்கையுடன் இந்த நோயை தான் எதிர்கொண்டு வருவதாகவும் சிகிச்சை பின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மம்தா மோகன் தாஸின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்க்கு அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர் குறிப்பாக நடிகை ரெபா மோனிகா ஜான் ’நீங்கள் ஒரு போராளி, மிகவும் அழகாக இருக்கிறீர்கள், கண்டிப்பாக நீங்கள் இதிலிருந்து மீண்டு வருவீர்கள்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் பல ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் அளித்து அவர் நிச்சயம் மீண்டும் வருவார் என்று கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.