close
Choose your channels

டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து தமிழ் நடிகையின் கருத்து: ரசிகர்கள் குழப்பம்!

Sunday, June 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் அறிவித்தார் என்பதை பார்த்தோம். அதில் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பாஜக அதிமுக உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர் என்பதும் திரையுலக பிரபலங்களான குஷ்பு, கஸ்தூரி, உள்பட ஒருசிலர் இது குறித்து தங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான பிரியா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ’தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அறிவித்த போது நான்’ என பதிவு செய்து சிரித்த முகத்துடன் கூடிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதனால் அவர் டாஸ்மாக் கடைகளை திறந்ததால் சந்தோஷப்படுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது

ஆனால் அதே நேரத்தில் அவரது பதிவில் கண்களை மூடியிருக்கும் குரங்கு, தலையில் அடித்துக் கொள்ளும் பெண், கவலைப்படுவது போன்ற இமோஜிகளையும் பதிவு செய்துள்ளதால் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு வருந்துவதாகவும் தெரிகிறது. உண்மையில் நடிகை பிரியா ஆனந்த் டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு வருத்தப்படுகிறாரா? அல்லது சந்தோசப்படுகிறாரா? என்று தெரியாமல் குழப்பத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.