close
Choose your channels

கமல்ஹாசன் மாய உலகில் இருக்கிறார்: தமிழிசை செளந்திரராஜன்

Monday, October 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஆளுமை நிறைந்த தலைவர்கள் மறைந்த நிலையில் மிக எளிதில் முதல்வர் பதவியை பிடித்துவிடலாம் என பல வருடங்களாக காத்திருந்த அரசியல்வாதிகளுக்கு பேரிடியாக இருந்தது நடிகர்களின் திடீர் அரசியல் பிரவேசம். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரின் அரசியல் வருகை அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் குறித்து இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது:

தனது வாழ்நாளின் முக்கால்வாசி பகுதியை தனது கஜானாவை நிரப்புவதையே கொள்கையாக கொண்டவர், அந்த நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இன்று அரசியல்வாதிகளை விமர்சிப்பது சிரிப்பைத்தான் வரவழைக்கின்றது. அவர் ஏதோ ஒரு மாய உலகிலும் மனக்கணக்கிலும் இருக்கின்றார். எல்லாமே சினிமா என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர். நான் கேட்கின்றேன் அப்போதெல்லாம் தமிழகத்தில் பிரச்சனையே இல்லையா? அப்போது இவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை' என்று தமிழிசை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.