close
Choose your channels

'வியூகம்', 'சபதம்': இரண்டு பாகங்களின் டைட்டிலை அறிவித்த பிரபல இயக்குனர்!

Saturday, October 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் தனது அடுத்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட இருப்பதாகவும் அந்த படங்களின் டைட்டில் ’வியூகம்’ மற்றும் ‘சபதம்’ என தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் பிரபலமாக இருந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. இவர் ஏற்கனவே ஒரு சில படங்களை இயக்கவிருப்பதாக அறிவித்திருந்த போதிலும் அந்த படங்களின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் இரண்டு பாகங்களின் படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகத்தின் டைட்டில் ’வியூகம்’ என்றும் இரண்டாம் பாகத்தின் டைட்டில் ‘சபதம்’ என்றும் அறிவித்துள்ளார். இரண்டுமே அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் எந்த ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறு படம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கை வரலாறு படம் என்றால் அதில் பொய்களைக் கலந்து சொல்ல வேண்டிய நிலை வரும் என்றும் ஆனால் இதில் 100 சதவீத உண்மை சம்பவங்களை கூற இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் பாகம் ரசிகர்களுக்கு ஷாக் என்றால், இரண்டாம் பாகம் எலக்ட்ரிக் ஷாக் ஆக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார். முதல்வரை சந்தித்த சில நாட்களில் அவர் இந்த அரசியல் படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.