'வேதாளம்' டிக்கெட்டுக்காக குவிந்த ரசிகர்கள். சென்னை தியேட்டரில் தடியடி
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் டிக்கெட் சென்னையின் அனைத்து திரையரங்குகளிலும் விற்று தீர்ந்துவிட்டது.
இந்நிலையில் இன்று காலை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திரையரங்குகளில் ஒன்றான ஆல்பர்ட் தியேட்டரில் முதல் நாளுக்குரிய டிக்கெட்டுக்கள் கவுண்டரில் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் தெரிந்தவுடன் எப்படியாவது தல' படத்தை பார்க்க, முதல் நாள் முதல் காட்சி்யின் டிக்கெட்டுக்களை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
கூட்டம் அதிகமான காரணத்தால் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கூட்டத்தினர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.