close
Choose your channels

இரும்புத்திரை' இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார்: அர்ஜூன்

Wednesday, August 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் அர்ஜூன், 'முதலில் வில்லனாக நடிக்க நான் சம்மதிக்கவில்லை. தேசப்பற்றுமிக்க பல படங்களில் நடித்துவிட்டு என்னால் எப்படி வில்லனாக நடிக்க முடியும் என்று யோசித்தேன். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் ரூபன், படத்தின் கதையை தயவுசெய்து கேட்டுவிட்டு அதன்பின்னர் முடிவெடுங்கள் என்று கூறினார். அதன்படி நான் கதை கேட்க சம்மதித்தேன்

இயக்குனர் மித்ரன் முதலில் கதை கூறும்போது நீங்களும் சமந்தாவும் இந்த படத்தில் நிறைய இடங்களில் டிராவல் செய்வீர்கள் என்று கூறினார். அதனால் நான் எனக்கு ஜோடியாகத்தான் சமந்தா நடிப்பார் என நினைத்திருந்தேன். ஆனால் அவரை விஷாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்து என்னை ஏமாற்ற்விட்டார் இயக்குனர்' என்று நகைச்சுவையுடன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.