close
Choose your channels

நடிகர் விமல் கொடுத்த புகார்… தயாரிப்பாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு!

Friday, August 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

“களவாணி“ படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகர் விமல் தன்னிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக சினிமா தயாரிப்பாளர் உட்பட மற்ற 2 பேர் மீது புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மன்னர் வகையறா”. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளின்போது பண நெருக்கடி ஏற்பட்டதாகவும் அதனால் இந்தப் படத்தை நடிகர் விமலின் தயாரிப்பு நிறுவனமான A3V நிறுவனமே தயாரிப்பு பணிகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தப் படத்திற்கு பைனான்ஸ் ஏற்பாடு செய்துகொடுத்த தயாரிப்பாளர் சிங்காரவேலன், கோபி மற்றும் விக்னேஷ் எனும் இருவருடன் இணைந்து கொண்டு நடிகர் விமலிடம் பொய்க்கணக்கு கூறியதாக புகார் அளித்துள்ளார். முதலில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது புகார் அளித்தபோது அந்த புகார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதையடுத்து நடிகர் விமல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதையடுத்து அவரது புகாரை ஏற்றுக்கொள்ளும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.