close
Choose your channels

ஐஸ்வர்யாவை குஷிப்படுத்த பிக்பாஸ் அனுப்பிய அடுத்த பிரபலம்

Thursday, September 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று கிளைமாக்ஸை எட்டவுள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் விருந்தினர் வாரமாக உள்ளது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் ஒவ்வொரு விருந்தினர்களும் ஐஸ்வர்யாவை நல்லவராக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபடுவதோடு, அவருக்கு மறைமுகமாக வாக்குகளும் சேகரிக்கின்றனர்.

அந்த வகையில் இந்த வேலையை செய்ய அடுத்ததாக பிக்பாஸால் இன்று அனுப்பப்பட்ட நபர் சென்றாயன். இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் சென்றாயன், பிக்பாஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நால்வரையும் பாராட்டினாலும், ஐஸ்வர்யாவிடம் 'உனக்கு வெளியே பயங்கரமான பெயர் இருக்கின்றது. நீ வெளியே வந்தவுடன் மக்கள் உன்னை கொண்டாட போகிறார்கள்' என்ற ரீதியில் பேசுகிறார். இதைக்கேட்டு ஐஸ்வர்யா ஆனந்தக்கண்ணீர் வடிக்க அவரை தேற்றுகிறார் வருங்கால சாம்பியன் ரித்விகா.

மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி சென்றாயன் வருகையால் மீண்டும் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது என்றே கருதப்படுகிறது. இன்று விருந்தினராக வரும் இன்னொரு நபர் யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.