close
Choose your channels

சென்னை சட்ட ஒழுங்கை பாதுகாக்க 2 புதிய ஐ.ஜிக்கள் நியமனம்

Monday, December 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அடுத்து பிற நகரங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

முதல்வர் சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனை நோக்கி நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்து கொண்டே வருகின்றது. அதுமட்டுமின்றி சென்னை நகரமே அசாதாரணமாக உள்ளது.

இந்நிலையில் சென்னையின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சாரங்கன், ஜெயராமன் என இரண்டு கூடுதல் ஐ.ஜி-க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க சென்னை முழுவதும் காவல் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் உள்பட ஏராளமான போலீசார் சென்னையின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.