close
Choose your channels

என்னோட உயிர் இப்படி தான் போகணும்: வடிவேலு பேட்டி

Saturday, September 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அனைத்து பிரச்சனைகளை முடித்து நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு ’மக்களை சிரிக்க வைத்து விட்டு தான் என்னுடைய உயிர் போகும்’ என்று கூறியுள்ளார்

இனிமேல் என்னுடைய பயணம் நகைச்சுவை பயணமாக இருக்கும் என்றும், மக்களை அதிக சிரிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறேன் என்றும், மக்களை தேவையான அளவு சிரிக்க வைத்த பின்னர் தான் என்னுடைய உயிர் போகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஷங்கர் படத்தில் இனி நடிக்க மாட்டேன் என்றும், அந்த பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன் என்றும் அதே போல் இனி வரலாற்று கதைகளிலும் நடிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

மேலும் முதலமைச்சர் அவர்களை சந்தித்த பின்னர் தான் எனக்கு நல்ல காலம் ஏற்பட்டது என்றும் அனைத்து பிரச்சனைகளையும் சுமுகமாக தீர்த்து விட்டதால் இனிமேல் என்னுடைய பயணம் நல்லபடியாக இருக்கும் என்றும் வடிவேலு தனது பேட்டியில் கூறினார்

இந்த பேட்டியின் போது இயக்குனர் சுராஜ் கூறியபோது ’நாய் சேகர்’ என்ற டைட்டில் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் அந்த டைட்டில் எங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ’நாய் சேகர்’ படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும், ஆனால் இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி கிடையாது என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.