close
Choose your channels

மோடியின் சுனாமியில் சிக்காத தமிழகம்: வைரமுத்து

Friday, May 24, 2019 • தமிழ் Comments
BJP
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வட இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய நிலையில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தின் எம்பிக்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும் பாஜக எதிர்ப்பு அலை தொடர்ந்து தமிழகத்தில் வீசும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கவிஞர் வைரமுத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியா முழுவதும் பாஜக திகைப்புக்குரிய வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக வியப்புக்குரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தியா முழுக்க ஒரு சுனாமி அலை பாய்ந்திருக்கின்றது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்கள் அந்த சுனாமி அலைக்கு நனைந்திருந்தபோது, அந்த சுனாமியில் நனையாத சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருப்பது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய கொள்கைவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்.

இந்த வெற்றி திராவிட இயக்க கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடலாம். ஆனால் வாக்கு வித்தியாசத்தை பார்க்கும்போது தளபதியின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். திராவிட இயக்கங்கள் முன்னிலும் வலிமையாக, முன்னிலும் எழுச்சியாக முன்னிலும் கொள்கை பேசும் கூட்டமாக திகழ வேண்டிய காலத்தில் இப்போது நாம் நிற்கிறோம். இந்த வெற்றியை தமிழர்கள் கொண்டாட வேண்டும். தமிழர்கள் தங்களை காத்துக்கொண்ட ஒரு கவசமாக இந்த வெற்றியை நான் கருதுகிறேன்.

இவ்வாறு வைரமுத்து கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.