close
Choose your channels

குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழாவை கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்

Tuesday, November 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று நவம்பர் 14 குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்கால தூண்கள் என்பதால் அவர்களை அரசியல்வாதிகளும் பிரபலங்களும் போற்றியும் ஆசிர்வத்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகமெங்கும் பிரபலமான நகைச்சுவை நடிகர் வையாபுரி பள்ளி குழந்தைகளுடன் இன்று 'குழந்தைகள் தினத்தை கொண்டாடினார்

திருவாரூரில் உள்ள 'நியூ பாரத் மேல்நிலை பள்ளி' 25வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட வையாபுரி அங்குள்ள குழந்தைகளோடு உரையாடினார். விழாவில் குழந்தைகள் நடிகர் வையாபுரியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பேசும் பேச சொல்லி கேட்டு மகிழ்ந்தனர். மேலும் அவர் பேசிய சினிமா வசனங்களையும் குழந்தைகள் விரும்பி கேட்டனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வையாபுரி சிறு குழந்தைகளின் விருப்பத்திற்குரிய நடிகராக மாறிவிட்டார் என்பதையே இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டியுள்ளது. பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளை மகிழ வைத்த வையாபுரிக்கு பள்ளி நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.