close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட்: வனிதா வெளியேற ரம்யா கிருஷ்ணன் காரணமா? 

Thursday, February 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வனிதா சமீபத்தில் வெளியேறிய நிலையில் அவர் வெளியேறுவதற்கு ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்று வதந்திகள் வெளியானது. இந்த வதந்திகளுக்கு பதிலடி தரும் வகையில் வனிதா தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் வெளியேறியவுடன் அவருக்கு பதிலாக அர்ஜுன், ரம்யா கிருஷ்ணன் அல்லது சிம்பு ஆகிய மூவரில் ஒருவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பதால்தான் வனிதா வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.

இந்த வதந்திக்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா, ‘ரம்யா கிருஷ்ணன் வருவதன் காரணமாக நான் இதில் இருந்து விலகவில்லை. பொய்யான தகவலை பரப்ப வேண்டாம். என்னுடைய உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டுதான் நான் வெளியேறும் முடிவை எடுத்தேன். என்னுடைய நிலையை புரிந்துகொண்டு உதவிய ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கும் பிக்பாஸ் அல்டிமேட் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எனது நன்றி என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி நடந்தபோது வனிதாவின் டான்ஸ் குறித்து நடுவர்களில் ஒருவராக இருந்த ரம்யா கிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் அதனால் வனிதா மற்றும் ரம்யாகிருஷ்ணன் இடையே மோதல் ஏற்பட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.