close
Choose your channels

அம்மா மஞ்சுளா பார்த்து பெருமைப்பட்ட புகைப்படங்கள்.. வனிதாவின் இளமைக்கால போட்டோஷூட்..!

Tuesday, February 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வனிதா தனது தாயார் மஞ்சுளா உயிரோடு இருக்கும் போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து இந்த புகைப்படங்களை பார்த்து எனது அம்மா பெருமை பட்டார் என்று பதிவு செய்துள்ளார்.

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு நடிகை ஆக அறிமுகமானார். அதன் பிறகு ராஜ்கிரணின் ’மாணிக்கம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த நிலையில் திடீரென சில ஆண்டுகளாக அவர் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக திரையுலகிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் தற்போது அவர் மீண்டும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் வனிதா ஆக்டிவ்வாக இருந்து வரும் நிலையில் அவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது தாயார் மஞ்சுளா உயிரோடு இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் என சில புகைப்படங்களை வனிதா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். தனக்கு அப்போது 32 வயது என்றும், மூன்று குழந்தைகள் பெற்ற நிலையில் நான் எடை குறைத்ததை பார்த்து எனது அம்மா சந்தோசப்பட்டதாகவும் எனது அம்மாவை பெருமைப்படுத்தும் வகையில் இந்த புகைப்படங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ’மிஸ் யூ அம்மா’ என்றும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.