close
Choose your channels

ஒரே வாரத்தில் 2 முறை சச்சினை சந்தித்த இயக்குனர்

Saturday, October 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிரிக்கெட் விளையாட்டை கதைக்கருவாக வைத்து தயாரிக்கப்பட்ட 'சென்னை 600 028' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்த வெங்கட்பிரபு, சமீபத்தில் ஐசிஎல் எனப்படும் இந்தியன் கால்பந்து லீக் போட்டியின் தொடக்க விழாவின்போது கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கரை சந்தித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சச்சின் தெண்டுல்கரை வெங்கட்பிரபு சந்தித்து ஒருவாரமே ஆகியுள்ள நிலையில் மீண்டும் அவரை சந்திக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு வெங்கட்பிரபுவுக்கு கிடைத்துள்ளது. துபாயில் நேற்று ஆரம்பமான 'செலிபிரட்டி பேட்மிண்டன் லீக்' தொடக்க விழாவில் வெங்கட்பிரபு, சச்சின் தெண்டுல்கர் மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் ஆகியோர்களை சந்தித்துள்ளார். இருவருடனும் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கிரிக்கெட் மீது மிகுந்த பற்றுள்ள வெங்கட்பிரபுவுக்கு ஒரே வாரத்தில் இரண்டு முறை சச்சினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.