வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் விஜய் பட வில்லன்? பான் - இந்தியா திரைப்படமா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட்பிரபு இயக்கிய ’மாநாடு’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்தநிலையில் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு நாகசைதன்யா நடித்து வரும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெங்கட்பிரபு - நாக சைதன்யா படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
விஜய் நடித்த ’புலி’ என்ற திரைப் படத்தில் வில்லனாகவும் பல கன்னட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் நடிகர் கிச்சா சுதீப். இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு அடுத்ததாக இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் பான் - இந்தியா திரைப்படமாக தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் வரும் நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.