close
Choose your channels

விஜய்க்கு வெற்றிமாறன் கூறிய கதை இதுதானா? மாஸ் தகவல்

Sunday, September 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்க்கு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கதை கூறினார் என்றும் இந்த கதையை கண்டிப்பாக நாம் இணைந்து திரைப்படமாக்குவோம் என்றும் விஜய் உறுதி அளித்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் விஜய்க்கு வெற்றிமாறன் கூறிய கதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் விவசாயிகள் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த நாவல் ஒன்றை கோட்டா நீலிமா என்பவர் எழுதியுள்ளார். Shoes of the Dead என்ற தலைப்பில் வெளியான இந்த நாவல் நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விவசாயிகள் தற்கொலை குறித்த இந்த கதையைதான் விஜய்யிடம் வெற்றிமாறன் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விவசாயிகள் பிரச்சனை குறித்த திரைப்படமான ’கத்தி’ திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார் என்ற நிலையில் இந்த படம் ’கத்தி 2’ என்ற டைட்டிலில் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.