close
Choose your channels

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை சமாளித்த வித்யாபாலன்: சென்னையில் நடந்த திடுக் சம்பவம்..!

Saturday, March 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் அவரிடம் வித்தியாசமான முறையை கையாண்டதை அடுத்து தனது எண்ணம் ஈடேறாமல் அந்த இயக்குனர் சென்று விட்டதாகவும் சென்னையில் நடந்த திடுக்கிடும் சம்பவம் ஒன்றை சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் வித்யா பாலன் என்பதும் ’ஓம் சாந்தி ஓம்’ ’கஹானி’ உள்பட பல வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தி டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது என்பதும் இந்த படத்தின் மூலம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்த நடிகை வித்யா பாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னை படுக்கைக்கு அழைத்த சென்னையைச் சேர்ந்த இயக்குனர் ஒருவர் குறித்து கூறியுள்ளார். ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக நான் ஒப்பந்தம் ஆனதாகவும், சென்னையில் அந்த இயக்குனர் தன்னை நேரில் காண வேண்டும் என்று கூறியதை அடுத்து அவரை பார்க்கச் சென்று இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

அந்த இயக்குனர் மறுநாள் தன்னை ஹோட்டல் அறைக்கு வரச் சொல்லியபோது தனக்கு சந்தேகமாக இருந்தது என்றும் தனது வாழ்க்கையில் இதுவரை படுக்கைக்கு அழைத்த இயக்குனரையே தான் சந்தித்தது சந்தித்ததில்லை என்பதால் அவரிடம் சுதாரிப்பாக இருக்க முடிவு செய்தேன் என்றும் கூறினார்.

இயக்குனரின் அறைக்கு சென்ற பிறகு நான் கதவை திறந்து வைத்திருந்தேன், அது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, கதவை திறந்து வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்ததால் அவரால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியவில்லை, அதனால் ஒரு கட்டத்தில் அவர் எழுந்து வெளியேறிவிட்டார் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் காரணமாக அந்த விளம்பர படத்திலிருந்து தான் நீக்கப்பட்டேன், இருப்பினும் எனக்கு மகிழ்ச்சி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாலிவுட் திரை உலகை பொருத்தவரை எனக்கு படுக்கைக்கு அழைக்கும் சம்பவமே நடைபெறவில்லை என்பதால் அந்த வகையில் நான் அதிர்ஷ்டம் அடைந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகை வித்யா பாலனின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.