close
Choose your channels

விக்னேஷ்சிவன் - நயன்தாரா இணையும் புதிய படம்: ஹீரோ யார் தெரியுமா?

Wednesday, January 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அந்த கோரிக்கை தற்போது நிறைவேறும் நிலையில் உள்ளது. 

ஆம், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீண்டும் நானும் ரெளடிதான்’ கூட்டணி இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தை மாஸ்டர் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், விஜய்சேதுபதி நடித்து வரும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் தயாரிப்பாளருமான லலித் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகிய நால்வரும் மீண்டும் இணையும் இந்தப் படம் 'நானும் ரெளடிதான்’ போலவே வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.